Meine Blog-Liste

Mittwoch, 21. November 2018

Sarvam Sakthi Mayam - Jukebox | Amman Songs | R.S. Ravipriyan | Tamil De...

கால பைரவ அஷ்டோத்தர ஸத நாமாவளி இன்று 21/11/2018 புதன்கிழமை

கால பைரவ அஷ்டோத்தர ஸத நாமாவளி இன்று 21/11/2018 புதன்கிழமை
(Devakottai Dolphin AR Ramanathan an பொற்சபை நாயகன்0

கால பைரவ அஷ்டோத்தர ஸத நாமாவளி இன்று 21/11/2018 புதன்கிழமை உங்கள் பிரார்த்தனைக்காக ,எங்கள் ஆத்ம த்ருப்திக்காகவும் பதிவு செய்துள்ளோம்.துடியுள்ள தெய்வம் என்று பைரவரை ,நரசிம்மரையும் அழைக்க முடியும் !பக்தன் எப்போது அழைப்பான் ,அபயக்குரலில் கூப்பிடும் அவனை அபாயத்தில் இருந்து காப்பாற்ற என்று துடிப்போடு காத்து நிற்கின்ற பேசும் தெய்வம் பைரவர் !உருகி அழையுங்கள் !ஓடோடி வந்து உங்கள் முன் நிற்பார் ஸ்ரீ காலபைரவர் !துயர் நீங்கும் !இன்பம் பொங்கும் !ஸ்ரீ காபைரவர் திருவடிகளே துணை !
ஓம் பைரவாய நம
ஓம் பூத நாதாய நம
ஓம் பூதாத்மனே நம
ஓம் பூதபாவநாய நம
ஓம் ஷேத்திரதாய நம
ஓம் ஷேத்திரபாலாய நம
ஓம் ஷேத்திரக்ஞாய நம
ஓம் க்ஷத்ரியாய நம
ஓம் விராஜே நம
ஓம் ஸ்மசானவாஸிநே நம
ஓம் மாம்ஸாசிநே நம
ஓம் ஸர்ப்பராசஸே நம
ஓம் ஸ்மராந்தக்ருதே நம
ஓம் ரக்தபாய நம
ஓம் பானபாய நம
ஓம் ஸித்தாய நம
ஓம் ஸித்திதாய நம
ஓம் ஸித்தஸேவிதாய நம
ஓம் கங்காளாய நம
ஓம் காலசமனாய நம
ஓம் கலாய நம
ஓம் காஷ்டாய நம
ஓம் தநவே நம
ஓம் கவயே நம
ஓம் த்ரிநேத்ரே நம
ஓம் பஹுநேத்ரே நம
ஓம் பிங்களலோசனாய நம
ஓம் சூலபாணயே நம
ஓம் கட்கபாணயே நம
ஓம் கங்காளிநே நம
ஓம் தூம்ரலோசனாய நம
ஓம் அபீரவே நம
ஓம் பைரவாய நம
ஓம் நாதாய நம
ஓம் பூதபாய நம
ஓம் யோகிநீபதயே நம
ஓம் தநதாய நம
ஓம் தநஹாரிண நம
ஓம் தநவதே நம
ஓம் ப்ரீதிபாவனாய நம
ஓம் நாகஹாராய நம
ஓம் நாகபாசாய நம
ஓம் வ்யோமகேசாய நம
ஓம் கபாலப்ருதே நம
ஓம் காலாய நம
ஓம் கபாலமாலிநே நம
ஓம் கமநீயாய நம
ஓம் கலாநிதயே நம
ஓம் த்ரிலோசனாய நம
ஓம் ஜ்வலந்நேத்ராய நம
ஓம் த்ரிசிகிநே நம
ஓம் த்ரிலோகபாய நம
ஓம் த்ரிநேத்ர தநயாய நம
ஓம் டிம்பாய நம
ஓம் சாந்தாய நம
ஓம் சாந்தஜனப்ரியாய நம
ஓம் வடுகாய நம
ஓம் வடுவேஷாய நம
ஓம் கட்வாங்க வரதாரகாய நம
ஓம் பூதாத்யக்ஷõய நம
ஓம் பசுபதயே நம
ஓம் பிக்ஷúதாய நம
ஓம் பரிசாரகாய நம
ஓம் தூர்தாய நம
ஓம் திகம்பராய நம
ஓம் சூராய நம
ஓம் ஹரிணாய நம
ஓம் பாண்டுலோசனாய நம
ஓம் ப்ரசாந்தாய நம
ஓம் சாந்திதாய நம
ஓம் ஸித்தாய நம
ஓம் சங்கராய நம
ஓம் ப்ரிய பாந்தவாய நம
ஓம் அஷ்ட மூர்த்தயே நம
ஓம் நிதீசாய நம
ஓம் க்ஞான சுக்ஷúஷே நம
ஓம் தபோமயாய நம
ஓம் அஷ்டாதாராய நம
ஓம் ஷடாதாராய நம
ஓம் ஸர்ப்பயுக்தாய நம
ஓம் சிகீஸகாய நம
ஓம் பூதராய நம
ஓம் பூதராதீசாய நம
ஓம் பூபதயே நம
ஓம் பூதராத்மஜாய நம
ஓம் கங்காலதாரிணே நம
ஓம் முண்டிநே நம
ஓம் நாகயக்ஞோபவீதவதே நம
ஓம் ஜ்ரும்பணோ மோஹந: ஸதம்பீ மாரண: ÷க்ஷõபணாய நம
ஓம் ஸுத்த நீலாஞ்சன ப்ரக்யாய நம
ஓம் நைத்யக்னே நம
ஓம் முண்ட பூஷிதாய நம
ஓம் பலிபுஜே நம
ஓம் பலிபுங் நாதாய நம
ஓம் பாலாய நம
ஓம் பால விக்ரமாய நம
ஓம் ஸர்வபாத் தாரணாய நம
ஓம் துர்க்காய நம
ஓம் துஷ்டபூத நிஷேவிதாய நம
ஓம் காமிநே நம
ஓம் கலாநிதயே நம
ஓம் காந்தாய நம
ஓம் காமிநீ வசக்ருதே நம
ஓம் வசினே நம
ஓம் ஸர்வஸித்தி ப்ரதாய நம
ஓம் வைத்யாய நம
ஓம் ப்ரபவே நம
ஓம் விஷ்ணவே நம
ஓம் ஸ்ரீ கால பைரவாய நமஹ
கால பைரவ அஷ்டோத்தர ஸத நாமாவளி ஸம்பூர்ணம்
ஸ்ரீ காபைரவர் திருவடிகளே துணை
மயிலம் மலை முருகன் கோவில்
மயிலம் தலம் சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் திண்டிவனத்துக்கு அருகில் இருக்கிறது. திண்டிவனத்தில் இருந்து பாண்டிச்சேரி செல்லும் சாலையில் சுமார் 3 மைல் தொலைவில் மயிலம் மலை முருகன் கோவில் இருக்கிறது. இது மிகவும் சிறிய மலை, மயிலைப் போல் காட்சி அளிக்கும் மலை. இதனால் இந்த மலைக்கு மயிலம் என்று பெயர். மயிலம் தலத்தின் சுருக்கமான தல வரலாறு:-
கந்தபுராணத்தில் இது பற்றிய தகவல் ஒன்று உள்ளது. முருகனோடு அசுரனான சூரபத்மன் போர் செய்து தோற்றான். அப்படித் தோற்றவன் நல் அறிவு பெற முருகனுக்கு வாகனமாக இருக்க விரும்பினான். அவன் தனது விருப்பத்தை முரு கனிடம் தெரிவித்தான்.
உடனே முருகன், “நீ மயில் போன்ற மலையாகி வராக நதியின் வட கரையில் நின்று தவம் செய். உன் ஆசையைப் பூர்த்தி செய் கிறேன்” என்றார். அவனும் அதன்படியே நின்று தவம் செய்தான். அவன் மீது இரக்கப்பட்ட முருகன் இங்கே கோவில் கொள்ளக் காரணமாயிற்று என்கிறது தல புராணம்.
மயிலம் மலையில் கோவிலை நிர்மாணித் தவர்கள் பொம்மையபுரம் மடாதிபதி ஆவார். சூரபதுமன் வரலாறு தவிர மற்றொரு செய்தியும் இத் தலத் திற்கு உண்டு.
சிவகணத் தலைவர்களில் சங்கு கன்னர் என்பவரும் ஒருவர். இவர் செய்த ஒரு குற்றத்திற்காக சாபம் பெற்றார்.அதன்படி அவர் பூலோகத்தில் மனிதனாகப் பிறந்தார். இவர் மயிலம் மலைக்கு கிழக்கேயுள்ள கடற்கரையில் பால சித்தராக அவதாரம் எடுத்தார். பால யோகியான இவர் தன் சாப விமோசனம் வேண்டி மயிலம் மலையில் தவம் இருந்தார். முருகனோ, இவரை சிவ அபராதி என்று கூறி காட்சி தர மறுத்து விட்டார்.
இதையடுத்து வள்ளி, தெய்வ யானையின் உதவியை நாடிய பால யோகி தனக்கு வழிகாட்டுமாறு மன்றாடி வேண்டுகோள் விடுத்தார். பாலயோகி மீது இரக்கப்பட்ட தேவியர் இருவரும் அவருக்கு கருணை காட்ட முடிவு செய்தனர்.
அதன்படி அவர்கள் பாலசித்த ருடைய ஆசிரமத்திற்கு எழுந்தருளினார்கள். முருகனிடம் முதலில் தேவியர் பால சித்தருக்கு பரிந்துரை செய்து பார்த்தனர். அவர்கள் வேண்டுகோளை ஏற்க முருகன் மறுத்தார்.
இதன் காரணமாக வள்ளி, தெய் வானை இருவரும் பாலசித்தரின் ஆசிரமத்திலேயே தங்கி விட்ட னர். எத்தனை நாள்தான் முருகர் தன் தேவியரைப் பிரிந்து இருப்பார்?
எனவே, முருகன் வேட ரூபத்தில் சித்தர் ஆசிரமத்திற்கு வந்தார். அப்போது முருகனுக்கும், சித்தருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. முடிவில் வாதம் மல்யுத்தமாக மாறியது.
இந்த நிலையில் சூரபதுமனுக்குக் காட்டிய தன் திருகோலக் காட்சியை சித்தருக்கும் முருகன் காட்டினார். பின்பால சித்தருடைய விருப்பப்படி கல்யாண கோலத்தில் மலைமீது தம்பதி சமேதராய் கோவில் கொண்டார். மயிலம் மலையில் முருகன் கோவில் கொண்டதற்கு இந்த நிகழ்வே காரணம் என்று கூறப்படுகிறது.
மயிலம் ஆலய சிறப்புகள் :
மயிலம் கோவிலில் மலை ஏறும் படிக்கட்டுகள் செங்குத்தாக இல்லாமல், வயதானவர்களும் சிரமமில்லாமல் ஏறும் விதமாக அமைந்திருக்கிறது. இது சிறப்பானது ஆகும். இந்தத் திருக்கோயிலுக்கு பதினோரு தீர்த்தங்கள் இருப்பதாக ஐதீகம். இவற்றுள் ஒன்று அக்னி தீர்த் தம். இது மலைக்குத் தென்கிழக்கில் உள்ளது. இதில் நீராடியோ, அல்லது இதன் நீரைத் தலையில் தெளித்துக் சுந்தர விநாயகரை வழிபட்டு மலையேறுவது வழக்கம்.
தைப்பூச விழாவின்போது பக்தர்கள் இந்தக் குளக்கரையில் இருந்துதான் காவடி எடுப்பார்கள். அப்போது பக்திப் பெருக்கோடு பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி என தோளில் விதவிதமான காவடிகளைச் சுமந்தபடி நூற்றுக் கணக்கான பக்தர்கள் ஆடிப் பாடி மலையேறுவது கண்கொள்ளாக் காட்சி!மலை உச்சியை அடைந்தால் ஒருபுறம் ராஜ கோபுரம், இன்னொரு பக்கம் பெரிய மண்டபம் என கோயிலுக்குள் செல்ல 2 வழிகள் உள்ளன.
முருகனுக்குத் திருமணம் நடந்த தலம் மயிலம். அதனால் இந்தக் கோயிலில் திருமணம் செய்து கொள்வது விசேஷம் என்று கருதப்படுகிறது. இதை ஒரு வேண்டுதலாகவே செய்கிறார்கள். இதனால் முகூர்த்த நாட்களில் இங்குள்ள மண்டபத்தில் ஏராளமான திருமணங்கள் நடைபெறுகின்றன.
பொதுவாகவே சித்தர்கள் ஜீவசமாதி அடைந்த தலங்களில், பக்தர்களுக்கு வேண்டும் வரங்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. எவரிடமும் சரணடையாத முருகனது வேலாயுதம், பாலசித்தரிடம் வசமானது என்பது ஐதீகம். இதிலிருந்து பாலசித்தரின் சக்தி விளங்கும். இன்றைக்கும் மயிலத்தில் நடக்கும் கந்த சஷ்டி விழாவின்போது சூர சம்ஹாரத்துக்குக் புறப்படும் முருகர், பாலசித்தரிடமிருந்தே வேலாயுதத்தைப் பெற்றுச் செல்கிறார்.
பாலசித்தருக்கு அடுத்து மூலவர் காட்சி தருகிறார். வள்ளி- தெய்வானையுடன் இணைந்து நின்ற கோலத்தில் காட்சி தரும் முருகனின் ஒரு கையில் வேல். இன்னொரு கையில் சேவற்கொடி. பெரும்பாலான கோயில்களிலும் முருகனின் வாகனமான மயில் தெற்கு நோக்கியோ, நேராகவோ இருக்கும். இங்கு மட்டும் வடக்குத் திசையை நோக்கியபடி இருப்பது கோயிலின் சிறப்பு. தவத்துக்கு உரிய திசை வடக்கு. சூரபத்மன் இங்கு வடக்கு நோக்கித் தவமிருந்து முருகனின் வாகனமாக மாறியதால், அதே திசையை நோக்கியபடி அமரும் பெருமை இங்குள்ள மயில் வாகனத்துக்கு கிடைத்திருக்கிறது.
நொச்சி இலை :
முருகனுக்கு மிகவும் உகந்த நொச்சி மரங்கள் மயிலம் மலையில் ஏராளமாக உள்ளன. தினமும் காலை பூஜையின்போது நொச்சி இலைகளை மாலையாகத் தொடுத்து மூலவருக்கும், உற்சவ மூர்த்திகளுக்கும் அணிவிக்கிறார்கள். அதன் பிறகே மற்ற பூமாலைகளை அணிவிக்கிறார்கள்.
மூலவர் வீற்றிருக்கும் கருவறை மண்டபத்துக்கு வெளியில் பிரமாண்டமான வேலும் மயிலும் இருக்கின்றன. மயிலம் கோயிலில் செவ்வாய்க் கிழமை தோறும் காலசந்தி பூஜையின் போது வேலாயுதத்துக்கு அர்ச்சனை செய்கிறார்கள். இப்படி அர்ச்சனை செய்யும் பக்தர்களுக்குக் கடன் தொல்லையுடன் பணப் பிரச்சினைகள் அகலும் என்பது நம்பிக்கை.
இதேபோல உற்சவமூர்த்தி முருகப்பெருமானின் அருகில் அவரின் படைத் தளபதியான வீரபாகுவும் உற்சவராக இருக்கிறார். செவ்வாய்க்கிழமை காலையில் இவருக்குப் பாலபிஷேகம் செய்து, அர்ச்சனை செய்தால் சீக்கிரம் திருமணம் நடக்கும் என்பதால், ஒவ்வொரு செவ்வாயிலும் ஏராளமான பெண்கள் இங்கு வருகிறார்கள்.
எப்போதும் அமைதி நிலவும் இந்தத் தலத்துக்கு வந்து வழிபடுகிறவர்களுக்கு நிச்சயம் மன அமைதி கிடைக்கும்!
3 உற்சவர்கள் :
மயிலம் கோயிலில் முருகன் மூன்று விதமான உற்ச வராகக் காட்சியளிக்கிறார். இவர்களில் பிரதான உற்சவர் வள்ளி- தெய்வானை சமேதரான பாலசுப்பிரமணியர். பகலில் வெள்ளிக்காப்பு அணிந்தும், மாலை பூஜைக் குப் பிறகு தங்கக் காப்பு அணிந்தும் அருள் பாலிக்கும் இவர் மாதாந்திர கார்த்திகைகளிலும், பங்குனி உத்தரப் பெருவிழாவிலும் வீதியுலா வருகிறார்.
மலையைச் சுற்றி இருக்கும் மூன்றாம் பிராகாரத்தில் வீதியுலா நடக்கிறது. பங்குனி உத்திரம் இங்கு பன்னிரண்டு நாட்கள் பிரம்மோற்சவமாக விமரிசையாக நடக்கிறது. முருகனுக்கு மயில் மட்டுமின்றி, பல்வேறு விதமான வாகனங்கள் இருப்பதாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன. இதை நினைவுறுத்தும் விதமாக பங்குனி உத்தரப் பெருவிழாவில் திருமணக் கோலத்தில் தினம் ஒரு வாகனத்தில் முருகன் வீதியுலா வருகிறார். மயில், யானை, ஆட்டுக் கிடா, நாகம், பூதம் என விதம் விதமான வாகனங்களில் வலம் வரு வார் இந்த மூலவர்.
இரண்டாவது மூலவர் வள்ளி- தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி. பரணி நட்சத்திரத்தின்போது வீதியுலா வரும் இவர், தினசரி சுற்றுப் பிராகாரத்தில் இருந்தபடி அருள் பாலிக்கிறார். மாசிமக தீர்த்தவாரியின்போது இந்த உற்சவரை புதுவை கடற்கரைக்குத் தோளில் சுமந்து செல்கிறார்கள். ஐந்து நாட்கள் அங்கிருந்தவாறே அருள் வழங்கும் இவர் ஆறாவது நாளன்று திரும்பி வருவார்.
மூன்றாவது உற்சவர் ஆறுமுகங்கள் கொண்ட சண்முகப் பெருமான். கந்த சஷ்டி உற்சவத்தின்போது ஆறு நாட்கள் வீதியுலா வருவது இவர்தான்.
பாலசித்தர் வழங்கும் வேலாயுதம்:
பொதுவாகவே சித்தர்கள் ஜீவசமாதி அடைந்த தலங்களில், பக்தர்களுக்கு வேண்டும் வரங்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. எவரிடமும் சரணடையாத முருகனது வேலாயுதம், பாலசித்தரிடம் வசமானது என்பது ஐதீகம். இதிலிருந்து பாலசித்தரின் சக்தி விளங்கும். இன்றைக்கும் மயிலத்தில் நடக்கும் கந்த சஷ்டி விழாவின்போது சூர சம்ஹாரத்துக்குக் புறப்படும் முருகர், பாலசித்தரிடமிருந்தே வேலாயுதத்தைப் பெற்றுச் செல்கிறார்.
பாலசித்தருக்கு அடுத்து மூலவர் காட்சி தருகிறார். வள்ளி- தெய்வானையுடன் இணைந்து நின்ற கோலத்தில் காட்சி தரும் முருகனின் ஒரு கையில் வேல். இன்னொரு கையில் சேவற்கொடி. பெரும்பாலான கோயில்களிலும் முருகனின் வாகனமான மயில் தெற்கு நோக்கியோ, நேராகவோ இருக்கும். இங்கு மட்டும் வடக்குத் திசையை நோக்கியபடி இருப்பது கோயிலின் சிறப்பு.
தவத்துக்கு உரிய திசை வடக்கு. சூரபத்மன் இங்கு வடக்கு நோக்கித் தவமிருந்து முருகனின் வாகனமாக மாறியதால், அதே திசையை நோக்கியபடி அமரும் பெருமை இங்குள்ள மயில் வாகனத்துக்கு கிடைத்திருக்கிறது.
மயிலம் பொம்மபுர ஆதீனம் :
மயிலம் பொம்மபுர ஆதீனம் வீரசைவ மரபைச் சேர்ந்த ஆதீனமாகும். இது புதுவையை ஒட்டிய தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்ட கடலோர எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. ஆதீனங்கள், பக்தி நெறி தழைக்கவும், தமிழ் மொழியை வளர்க்கவும் தோன்றின. மனித நிலையிலிருந்து இறைநிலையை அடைய உதவும் வாழ்வியல் ஒழுகலாறுகளைப் போதிப்பவை ஆதீனங்களாகும்.
ஆதீனத் தோற்றம் :
மயிலம் பொம்மபுர ஆதீனம் திருக்கயிலாய ஞானபரம்பரையின் வழிவந்தது ஆகும். திருக்கயிலையில் சிவபெருமானுக்கு மேற்குத் திசைக் காவலராக விளங்கிய பூதகணங்களுள் ஒருவர் சங்குகன்னர் ஆவார். இவரைச் சிவபெருமான் அழைத்து, ‘தென்னாட்டில் வீரசைவநெறி தழைத்தோங்கவும் சித்தர் கொள்கைகள் வலுப்பெறவும் செய்க!’ என்று அருளாணை இட்டார்.
ஆதீனகர்த்தர் சங்குகன்னர் :
அதற்குச் சங்குகன்னர் கயிலையில், ‘தான் இருப்பது போன்றே மண்ணுலகிலும் இறைவனுக்கு அருகில் இருக்கும் நிலையை அடைந்திருக்க வேண்டும்’ என்று சிவபெருமானிடம் வேண்டினார். அவ்வேண்டுதலை சிவபெருமான் ஏற்று, ‘முருகப் பெருமானின் அருளோடு அவருக்கருகில் சிவயோக சமாதியுற்று சிவலிங்க வடிவமெய்தி அடியார்களால் வணங்கப்பெறும் நிலை பெறுக!’ என்று வாழ்த்தியருளினார்.
சங்குகன்னர் அவதாரம் :
அவ்வழியே சங்குகன்னர் உலகில் கருவழித் தோன்றாமல் திருநீறு, உருத்திராக்கம், கல்லாடை, இட்டலிங்கம் அணிந்த மார்பு, செஞ்சடை, குண்டலமணிந்த திருச்செவிகள், சின்முத்திரையுடன் கூடிய வலக்கை, திருநீற்றுப்பை, மாத்திரக்கோல் இடக்கை, வீரசைவ ஆகமங்கூறும் திருவாய், ஐந்தெழுத்தை ஒலிக்கும் திருநாக்கு ஆகியவற்றுடன் கூடிய திருக்கோலத்துடன் பத்து வயது நிறைந்த பாலகனாகத் தோன்றினார்.
ஆதீனத் தோற்றம் :
இதனை அடுத்துள்ள, பெருமுக்கல் முதலிய மலைகளுக்கும் வனங்களுக்கும், தம் யோக வல்லமையால் உலாவிச் சென்று ஆங்காங்குள்ள சித்தர்களுக்கும், அடியார்களுக்கும் வீரசைவ ஆகம நெறிகளை உணர்த்தினார். சித்துக்களையும் செய்தருளினார். பாலவயதினராய்ச் சித்துக்கள் பல செய்தமையால் பாலசித்தர் எனப்பெயர் கொண்டார். பிரம்மநிலையை உணர்ந்து தங்கியிருந்தமையால் இவ்வூர் பிரமபுரம் என வழங்கலாயிற்று. பாலசித்தரின் தவஆற்றல் உலகில் பரவியதால் சீடர்கள் பலர் உருவாயினர். அச்சீடர்களின் பக்குவநிலையறிந்து ஞானஉபதேசம் செய்தருளித் தாம் தங்கிச் சிவயோகம் புரிவதற்கு அமைத்துக் கொண்ட திருமடம் பொம்மயபாளையத் திருமடம் என்ற பெயரில் அழைக்கப் பெறலாயிற்று.
மயிலை வரலாறு :
இங்ஙனம் பாலசித்தர் திருமடத்தில் வீற்றிருக்கும் நாளில், சிவபெருமானது ஆணையின்வண்ணம் நாரதர், பாலசித்தர் முன் தோன்றி, ‘பொம்மபுரத்திற்கு மேற்கே மயூராசலம் (மயிலம்) என்ற ஓர் ஊர் உள்ளது. ஆங்கே முன்னாளில் சூரபதுமன் மயில் வடிவ மலையாக இருந்து முருகனை நோக்கி, கடுந்தவம் புரிந்தனன். அதற்கு முருகப் பெருமான் சூரபதுமன் விருப்பப்படியே அவனை மயில்வாகனமாக ஏற்றருளினார். அவனும் “ஐயனே, மலைவடிவாக இருந்து யான் தவம் செய்தமையால் இம்மலை மயிலமலை என்ற பெயரால் வழங்க வேண்டும்” என்றும் “தேவரீர் எந்நாளும் இங்கிருந்து அன்பர்களுக்கு அருள்பாலிக்க வேண்டும்” என்றும் வேண்டிக் கொண்டான்.
அவ்வாறே முருகனும் “சிலகாலத்திற்குப் பின்னர் இம்மலையில் பாலசித்தர் என்பால் எம்மை நோக்கி வந்து தவம் புரிந்து எம்முடன் போரிட்டு எம்மால் ஆட்கொள்ளப் பெறும் காலத்து எம்தேவியருடன் எழுந்தருளி நின் விருப்பத்தை நிறைவேற்றுவோம்” என்றுரைத்து மறைந்தருளினார். எனவே, தாங்களும் மயிலமலையை அடைந்து தவம் செய்தால் எண்ணிய யாவும் கைகூடும்’ என்று நாரதர் பாலசித்தருக்கு உணர்த்தி விடைபெற்றார்.
மயிலைத் தவம் :
இந்நிலையில், பாலசித்தர் மயிலம் அடைந்து அங்குள்ள சுனைகளில் நீராடி முருகனை வழிபட்டார். மேலும் முருகனை நோக்கி, பதுமாசனமாக முப்பத்தைந்து ஆண்டு காலம் தவநிலையில் இருந்தார். முருகன் அருள்புரியாததால் பஞ்சாக்கினி நடுவிலிருந்து கடுந்தவமும் புரியலானார். இந்நிலையிலும் முருகப்பெருமான் அருளாததால் அவர்தம் தேவியராகிய வள்ளி தெய்வயானையரை நோக்கி, பலநாள் தவம் செய்தார் பாலசித்தர்.
தேவியர் இருவரும் சித்தரின் தவத்திற்கு இரங்கி, அவருக்கு அருள்புரியுமாறு முருகப் பெருமானிடம் வேண்டினர். முருகனும் “அருள்புரியும் காலம் வருந்துணையும் யாம் அமைதியாக இருப்பதனை அறியாமல் அவருக்கு அருள்புரிய வேண்டுமென்று வற்புறுத்தும் நீவிர் இருவரும் எம்மை விட்டு அகல்வீராக” என ஆணையிட்டார்.
அன்னையர் அருள் :
உடனே, பாலசித்தருக்கு அருள்புரியாத முருகன்பால் ஊடல் கொண்ட தேவியர் இருவரும் சித்தக் கன்னியர்களாக வடிவம் கொண்டு சித்தருக்கு முன் தோன்றி நின்றனர். அதனைக் கண்ட சித்தர் முருகப் பெருமானுடைய தேவியர்களே தம்மை ஆட்கொள்ள இவ்வுருக் கொண்டு எழுந்தருளினர் என யோக ஞான வல்லமையால் உணர்ந்து, அவர்களை உபசரித்து, “நீங்கள் யார்? வந்த காரணம் யாது?” என வினவினார். அவர்களும் “இவ்விடத்தில் சித்தர் இருப்பதை அறிந்து இங்கு உறைய விரும்பி வந்தோம். நீங்கள் உங்கள் புதல்வியர்களாக எங்களைப் போற்றிக் காத்தல் வேண்டும்” என வேண்டினர். அதற்குச் சித்தரும் உடன்பட்டுத் தேவியரை, தேவதச்சனைக் கொண்டு ஒரு மாளிகை உருவாக்கச் செய்து அதில் வீற்றிருக்கச் செய்தார்.
முருகனொடு பொருதுதல் :
முருகப்பெருமான் பாலசித்தருக்கு அருள்புரியும் காலம் கனிந்தமையால் பிரிந்த தேவியரைத் தேடிவருவார்போல, மயில மலையை அடைந்து தேவியர் இருக்கும் இடம் இதுவெனத் துணிந்து போர்க்கோலம் கொண்ட அரசர் வடிவத்தில் அம்மாளிகையில் நுழையச் சென்றார். அங்கிருந்த பாலசித்தர், “கன்னியர் இருக்குமிடத்து ஆடவர் புகுதல் தகாது” எனத் தடுத்தும் முருகன் நுழைய முற்பட்டபோது இருவருக்கும் போர் ஏற்பட்டது.
பாலசித்தர் முருகன் எய்திய படைகள் அனைத்தையும் தடுத்ததோடு, இறுதியாக முருகன் ஏவிய வேலினையும் கன்னியர் அருளால் தம்வசப்படுத்திக் கொண்டார். முடிவில், முருகப்பெருமான் படைக்கருவிகள் அற்றநிலையில் சித்தருடன் நேருக்கு நேராக மற்போர் புரியத் தொடங்கினார். பாலசித்தரது மார்பில் அறைந்து அவரைக் கீழே தள்ளியும் ஒருவரோடு ஒருவர் கட்டிப் புரண்டும் காலால் உதைத்தும் போர் புரிந்து அருளினார்.
மணக்கோலம் :
தம்மோடு போர்புரிந்தவர் முருகனே என உணர்ந்த பாலசித்தர் போர் செய்த குற்றத்தைப் பொறுத்தருளுமாறு திருவடி பணிந்து வேண்டி நின்றார்.
முருகனும் அவ்வாறே பாலசித்தருக்கு ஞான உபதேசம் வழங்கி மாளிகையினுள் இருந்த அரியணையில் அமர்ந்தார். அந்நிலையில் சித்தரும், தேவியர் இருவரையும் அழைத்து வந்து, அவர்களோடு முருகப் பெருமானை வணங்கி நின்று, “அடியேன் என் புதல்வியர்களாகப் பாவித்த இக்கன்னியர்களை தேவரீர் மணமுடித்து மணக்கோலத்துடன் இத்தலத்தில் எந்நாளும் எழுந்தருள வேண்டும்” என வேண்டினார்.
அவ்வாறே, முருகனும் உமாதேவியாரோடு சிவபெருமான் தேவகணங்கள் சூழ எழுந்தருளும்படி தியானித்தார். அக்கணத்தே, தேவகணங்கள் சூழ இறைவனும் இறைவியும் எழுந்தருளி மயன் வகுத்த மணிமண்டபத்தில் வீற்றிருந்தனர். சிவனது அருளாணையின் வண்ணம் நான்முகன் திருமணச் சடங்கு நிகழ்த்த, பாலசித்தர் தத்தநீர் வார்க்கவும், முருகன் கன்னியர் இருவரையும் மணந்தருளினார்.
அருள் கனிந்தது :
அவ்வமயத்தில், சிவன் பாலசித்தரை நோக்கி, “இத்திருத்தலத்தில் நம் குமரனாகிய முருகன் என்றென்றும் திருவருளையும் குருவருளையும் வழங்கிக் கொண்டிருக்க இன்னும் ஐந்நூறு ஆண்டு காலம் அனைவருக்குக்கும் புலப்படுமாறு வெளிப்பட இருந்து வீரசைவ நெறியை ஓங்கச் செய்து, பின் முருகனின் வலப்பாகத்தில் ஜீவசமாதி நிலையடைந்து பின் அருளுருப் பெற்று அனைவருக்கும் அருள் வழங்குக!” என அருள்புரிந்தார்.
சீடர் பரம்பரை :
இவ்வாறு அருள்பெற்ற பாலசித்தர், பொம்மபுரத்தை அடுத்த பெருமுக்கல் மலையில் தங்கியிருந்து வீரசைவ நெறிபரப்பிவந்த காலத்தில், சிதம்பரம் பச்சைக்கந்த மரபைச் சார்ந்த அம்மவை என்பார் மகப்பேறு இன்றி வருந்தினார். இனிச் சிவத்தொண்டே மேற்கொள்வது என்னும் திண்ணிய எண்ணத்தோடு பாலசித்தரை அணுகி, அவருக்குத் தம் கணவரும் தாமும் தொண்டு புரியலாயினர். அம்மவை அம்மையார் சித்தருக்குத் தாமே சதுரக்கள்ளிப் பாலைக் கறந்து வந்து கொடுக்கும் திருத்தொண்டினைச் செய்து வந்தார்.
அங்ஙனம் கள்ளிப்பாலைத் தந்த அளவில் சித்தர் உண்டு எஞ்சிய கள்ளிப்பால் பிரசாத சேடத்தை அம்மவை அம்மையார் அருந்தியதால் குருவருள் வழி ஓர் அழகிய ஆண்மகவை ஈன்றெடுத்தார். பாலசித்தருடைய அறிவுரைப்படி அவருடைய திருவருட் பார்வையால் அக்குழந்தை வளர்ந்து, அவருக்குத் தொண்டு செய்து வந்தது. அக்குழந்தையின் பக்குவநிலையுணர்ந்து சீடராக அமைத்துக் கொண்டார் பாலசித்தர்.
சிவஞானபாலய தேசிகர் :
முருகன் அருள்பெற்ற பாலசித்தர் பொம்மபுர மடத்தில் அச்சீடருக்குச் சந்நியாசாசிரமம் தந்து, ஞானஉபதேசம் புரிந்து, பின்னர் ஆசாரிய அபிஷேகமும் செய்து, தமது அமிசத்திலே ஓர் அமிசம் அவரிடத்தில் பதியும்படி திருவருள் புரிந்து, அவர்தம்மை நோக்கி “நீ பாலை உணவாகக் கொண்டு, சீடபரம்பரையோடு சிவஞானபாலய தேசிகன் என வாழ்வாயாக!” என்று அருள்புரிந்தார். மேலும், “இத்திருமடம் பாலயசுவாமிகள் திருமடம் என்றும் வழங்குவதாகுக!” என அருள்புரிந்த நிலையில் பாலசித்தரின் சீடர் பரம்பரை மயிலம் திருமடத்தில் வீரசைவ நெறிபோற்றிச் சிவத்தொண்டை வாழையடி வாழையாக வளர்த்து வருகிறது.
www.maalaimalar.com

அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது

Karpagam Amma an 🔱ஓம் சிவ சிவ ஓம் 🔱

இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், இதுதான் மருந்து, புதிய கண்டுபிடிப்பெல்லாம் கிடையாது, ஒருதடவை சொன்னா சொன்னதுதான் ,
இந்த பாடலை ஒவ்வொரு வரும் எழுதி வைத்து கொள்ளுங்கள், எக்காலத்திலும் உதவும்,
இப்பாடல்
அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது
சித்த மருத்துவர் பாக்கம் தமிழன்
தமிழ் மருத்துவ அறிவுரைப்பா
மூளைக்கு வல்லாரை
முடிவளர நீலிநெல்லி
ஈளைக்கு முசுமுசுக்கை
எலும்பிற்கு இளம்பிரண்டை
பல்லுக்கு வேலாலன்
பசிக்குசீ ரகமிஞ்சி
கல்லீரலுக்கு கரிசாலை
காமாலைக்கு கீழாநெல்லி
கண்ணுக்கு நந்தியாவட்டை
காதுக்கு சுக்குமருள்
தொண்டைக்கு அக்கரகாரம்
தோலுக்கு அருகுவேம்பு
நரம்பிற்கு அமுக்குரான்
நாசிக்கு நொச்சிதும்பை
உரத்திற்கு முருங்கைப்பூ
ஊதலுக்கு நீர்முள்ளி
முகத்திற்கு சந்தனநெய்
மூட்டுக்கு முடக்கறுத்தான்
அகத்திற்கு மருதம்பட்டை
அம்மைக்கு வேம்புமஞ்சள்
உடலுக்கு எள்ளெண்ணை
உணர்ச்சிக்கு நிலப்பனை
குடலுக்கு ஆமணக்கு
கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே
கருப்பைக்கு அசோகுபட்டை
களைப்பிற்கு சீந்திலுப்பு
குருதிக்கு அத்திப்பழம்
குரலுக்கு தேன்மிளகே!
விந்திற்கு ஓரிதழ்தாமரை
வெள்ளைக்கு கற்றாழை
சிந்தைக்கு தாமரைப்பூ
சிறுநீர்க்கல்லுக்கு சிறுகண்பீளை
கக்குவானுக்கு வசம்புத்தூள்
காய்ச்சலுக்கு நிலவேம்பு
விக்கலுக்கு மயிலிறகு
வாய்ப்புண்ணிற்குமணத்தக்காளி
நீர்க்கோவைக்கு சுக்குமிளகுநீர்
நீரிழிவிற்கு ஆவாரைக்குடிநீ்ர்
வேர்க்குருவிற்கு பனைநுங்குநீ
வெட்டைக்கு சிறுசெருப்படையே
தீப்புண்ணா குங்கிலியவெண்ணை
சீழ்காதுக்கு நிலவேம்பு
நாப்புண்ணிற்கு திரிபலாவேலன்
நஞ்செதிர்க்க அவரிஎட்டி
குருதிகழிச்சலுக்கு துத்திதேற்றான்
குருதிகக்கலுக்கு இம்பூரல்வேர்
பெரும்பாட்டிற்கு அத்திநாவல்
பெருவயிறுக்கு மூக்கிரட்டை
கக்கலுக்கு எலுமிச்சைஏலம்
கழிச்சலுக்கு தயிர்சுண்டை
அக்கிக்கு வெண்பூசனை
ஆண்மைக்கு பூனைக்காலி
வெண்படைக்கு பூவரசு கார்போகி
விதைநோயா கழற்சிவிதை
புண்படைக்கு புங்கன்சீமையகத்தி
புழுகுடற்கு வாய்விளங்காமணக்கு
கால்வெடிப்பா மருதாணிகிளிஞ்சல்
கரும்படை வெட்பாலைசிரட்டை
கால்சொறிக்குவெங்காரபனிநீர்
கானாகடிக்கு குப்பைமேனிஉப்பே
உடல்பெருக்க உளுந்துஎள்ளு
உளம்மயக்க கஞ்சாகள்ளு
உடல்இளைக்க தேன்கொள்ளு
உடல் மறக்க இலங்கநெய்யே
அருந்தமிழர் வாழ்வியலில்
அன்றாடம்சிறுபிணிக்கு
அருமருந்தாய் வழங்கியதை
அறிந்தவரை உரைத்தேனே!!

Samstag, 17. November 2018

SlidesGala

sivasri .pirasathkurukkal speech 16 .06. 2018 சிவஸ்ரீ.நடராஜபிரசாந்தகுருக...

தர்மம் தலை காக்கும்!
   (gowrybala Kirusna Kurukal
17/11/2018
தர்மம் செய்; அது, உன்னைக் காப்பாற்றும் என்பர். பயிரை காப்பாற்ற வேலி போடுகிறோம்; பயிர் நம்மை காப்பாற்றி, வாழ வைப்பதைப்போன்று, எவன் ஒருவன் தர்மத்தை கடைப்பிடிக்கிறானோ, அவனை தர்ம தேவதை கைவிடாது என்பதை விளக்கும் கதை இது:
பவனா என்ற ஊரில், கவுதமன், மணிகுண்டலன் எனும் இருவர் வாழ்ந்து வந்தனர்.
கவுதமன், ஏழை; ஆனால், வஞ்சக மனம் கொண்டவன். மணிகுண்டலன் பெரும் செல்வந்தரின் மகன்; மிகவும் நல்லவன்.
இவ்விருவரும் வெளியூர் சென்று, வியாபாரம் செய்து, பொருளீட்ட தீர்மானித்தனர். முதலீடு தன்னுடையது என்றாலும், கிடைத்த வருவாயில் பாதியை கவுதமனுக்கு கொடுத்தான், மணிகுண்டலன். ஆனால், மணிகுண்டலனின் செல்வத்தை முழுமையாக கவர திட்டமிட்ட கவுதமன், 'நண்பா... தர்மத்தை பற்றி என்ன நினைக்கிறாய்?' என்று கேட்டான். அதற்கு, மணிகுண்டலன், 'தர்ம வழியில் செல்வதே சிறந்தது; எந்நிலையிலும், தர்மம் தவறக் கூடாது...' என்றான்.
உடனே கவுதமன், 'தர்மமாவது, புண்ணியமாவது... எப்படியாவது சம்பாதித்து, பணக்காரனாக வாழ்வது தான் புத்திசாலித்தனம். வேண்டுமானால், உன் கருத்தை பொதுமக்கள் சிலரிடம் கேட்கலாம்; அவர்கள், நீ சொல்வதுதான் சரி என்று கூறினால், நீ எனக்கு தந்த பணத்தை தந்து விடுகிறேன்; மாறாக, நான் சொல்வது தான் சரி என்றால், உன் செல்வம் முழுவதையும் எனக்கு தந்து விட வேண்டும்...' என்று பந்தயம் கட்டினான்.
கவுதமனின் வஞ்சனையை அறியாத மணிகுண்டலன், அதற்கு ஒப்புக் கொண்டான். வழியில் செல்லும் சிலரிடம், இதுகுறித்து கேட்டனர். தர்மம் அறியாத அவர்களோ, 'கவுதமன் சொல்வதே சரி...' என்றனர். பந்தயப்படி மணிகுண்டலன் செல்வம் முழுவதையும் எடுத்துக் கொண்டான், கவுதமன்.
சில மாதங்களில், மீண்டும் வியாபாரம் செய்து, பெரும் பொருள் ஈட்டினான் மணிகுண்டலன். பொறாமை கொண்ட கவுதமன் மறுபடியும் அதே பந்தயத்தை கட்டினான்; இம்முறையும் மணிகுண்டலன் தோல்வியுற, அவன் கைகளை வெட்டினான் கவுதமன்.
நல்லவர்களுக்கு ஏற்படும் சோதனை கூட, வெற்றியில் தான் முடியும் என்பதற்கு சான்றாக, மணிகுண்டலன் தொட்ட காரியங்கள் எல்லாம் துலங்க, அவனுக்கு பெருஞ் செல்வம் சேர்ந்தது.
'இதற்கு மேல் இவனை விட்டு வைக்கக் கூடாது...' என்று தீர்மானித்த கவுதமன், 'தோற்பவர், கண்களை இழக்க வேண்டும்...' என்ற நிபந்தனையுடன், மறுபடியும் பந்தயம் போட்டான். இப்போதும், தோற்று, கண்களை இழந்த, மணிகுண்டலன், பல இடங்களில் சுற்றித் திரிந்து கடைசியில், கங்கைக் கரையில் இருந்த விஷ்ணு கோவிலுக்கு வந்து சேர்ந்தான்.
நள்ளிரவு பூஜைக்கு இலங்கையிலிருந்து வந்திருந்தார், விபீஷணர். அவர் மணிகுண்டலனின் நிலையைப் பார்த்து இரங்கி, அவனை பற்றி விசாரித்து அறிந்தார்.
பின், தன் காவலர்களிடம், 'ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையை தூக்கி வரும் போது, விசல்யகரணி எனும் அற்புத சக்தி வாய்ந்த மரத்தின் ஒரு பகுதி இங்கு விழுந்து விட்டது; தேடிப் பார்த்து எடுத்து வாருங்கள்...' என்று கட்டளையிட்டார்.
ஓர் இடத்தில், விசல்யகரணி பெரும் மரமாக வளர்ந்திருப்பதை கண்டனர், காவலர்கள். அதிலிருந்து ஒரு கிளையை ஒடித்து வந்தனர். அதை, மணிகுண்டலன் மீது தடவினார், விபீஷணர்.
உடனே, இழந்த கைகளையும், கண்களையும் பெற்றான், மணிகுண்டலன்.
இந்நிலையில், அப்பகுதியை ஆண்டு வந்த சிற்றரசரின் மகளுக்கு பார்வை பறி போனதால், அவளுக்கு யார் பார்வையை திரும்ப வரச் செய்கிறாரோ, அவரை தன் மகளுக்கு மணமுடித்து தருவதுடன், தன் நாட்டுக்கு அரசனாக முடிசூட்டுவதாக அறிவித்தார் அரசர்.
விபீஷணர் வழிகாட்டுதலின்படி, விசல்யகரணியின் மூலம், மன்னன் மகளுக்கு பார்வை கிடைக்குமாறு செய்து, இளவரசியை மணந்து, அந்நாட்டுக்கு அரசனானான் மணிகுண்டலன்.
சில காலம் கழித்து, காவலர்கள், 'மன்னா... இவன் கொலை, கொள்ளைகளில் தேர்ந்தவன்...' என்று கூறி, கவுதமனை இழுத்து வந்து மணிகுண்டலன் முன் நிறுத்தினர்.
தன்னை அழிக்க நினைத்தவன் என்ற போதிலும், அவனை மன்னித்து, பொருளுதவி செய்து அனுப்பி வைத்தான், மணிகுண்டலன்.
தர்மம் தலை காக்கும்!

Dienstag, 13. November 2018

சூரிச்அருள் மிகு சிவன் ஆலயத்தில்சூரன் போர் 13.11.2018

palani sooran poor பழனிமுருகன் சூரன் போர்

thirusenthur sooran poor 13.11.2018 திருச்செந்தூர் முருகன் சூரன்போர்.

thirusenthur sooran poor 13.11.2018 திருச்செந்தூர் முருகன் சூரன்போர்.

palani sooran poor பழனிமுருகன் சூரன் போர்

suran poor marthalai muththumari ammen சூரசம்ஹாரம்

மணியோசை

Mittwoch, 7. November 2018

கந்த சஷ்டி விரத முறை !


கந்த சஷ்டி விரத முறை !

விரதத்திற்கு முதல் நாளன்றே வீட்டினை கழுவி சுத்தப்படுத்தி மஞ்சள் நீர் தெளித்தல் அவசியம். விரத நாளன்று அதிகாலையில் துயிலெழுந்து நீராடி தோய்த்துலர்ந்த ஆடைகளை அணிந்து, காலையும் மாலையும் வீட்டின் சுவாமி அறையில் விளக்கேற்றி, வீபூதி பூசி, தேவராங்கள் பாடுதல் வேண்டும் அத்துடன் கோயில் வழிபாடு செய்தல் மிகவும் நன்று.

கேதாரகௌரி விரதம் பூர்த்தி செய்து கந்த சஷ்டி விரதம் பிடிப்போர், காலையில் நீராடி பூசை முடித்துத் தீர்தத்தை உட்கொண்டு அதன் பின் கந்த சஷ்டி
Bild könnte enthalten: 6 Personen, Personen, die lachen
விரதத்தை கடைப்பிடிக்கவும்.

ஊனை உருக்கி உள்ளொளி பெருக்கும் இவ்விரதத்தை தம் உடல் நிலைக்குத் தக்கதாக கடைப்பிடிப்பர். சிலர் ஆறு நாட்களும் எவ்வித அன்ன ஆகாரமின்றியும், சிலர் பானம் மட்டும் அருந்தியும், பலர் முதல் ஐந்து நாட்களும் ஒரு நேரம் உணவு உண்டு (பாலும் பழமும்) கடைசி நாளான ஆறாம் நாள் முழு உபவாசத்துடன் நித்திரை விழித்திருந்தும் ஏழாம் நாள் காலை முருகனை வழிபட்ட பின் பாரணை மூலம் விரதத்தைப் பூர்த்தி செய்வர்.

கந்த சஷ்டி விரதத்தில் படிக்க வேண்டியவை

இவ்விரதத்தின் போது, தினமும் கந்த சஷ்டி கவசம், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, திருப்புகழ், கச்சியப்ப சுவாமிகளின் கந்த புராணம் ஆகியவற்றைப் படித்தால், என்னவென்று சொல்ல முடியாத மனஅமைதி நிலவும். இதனை ஒவ்வொருவரும் உணர்ந்திருப்பர்.

கந்தசஷ்டி விரதத்தின் பலன்

குடும்பத்தில் துன்பங்கள் நீங்கவும், வேலைவாய்ப்பு, கடன் தொல்லை நீங்கவும் இவ்விரதத்தை கடைப்பிடிப்பது நன்று. "சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்" என்பது பழமொழி. இதன் உண்மையான பொருள், சஷ்டியில் விரதமிருந்தால் கருப்பையில் குழந்தை உண்டாகும் என்பதாகும். எனவே குழந்தை வரம் வேண்டும் பெண்களுக்கு இது மிகவும் சிறந்த விரதமாகும். சுருக்கமாகச் சொன்னால் இவ் விரதத்தை கடைப்பிடித்து விரும்பிய பலனைப் பெறலாம்.

Dienstag, 6. November 2018


 இவ்வாண்டுக்கான கேதாரகௌரி விரதம் நாளைநிறைவாகும் 2018

கேதார கௌரி விரத கதை / கேதார கௌரி கதை

காப்பு

ஆதி பரமேஸ்வரியே ஆண்டவனைப் பூசித்துப்
பாதியிடம் பெற்ற பரிசு தனை- நீதியுடன்
சொன்னவர்கள் கேட்டவர்கள் சோர்வின்றி நோற்றவர்கள்
துன்னுவரே பல்வளனும் தோய்ந்து

நூல்

வெள்ளியங்கிரியென விளங்கு கைலையில்
உள்ளந்தோறும் உறையும் ஒருவன்
உமையொரு பாகனாய் உன்னதரேத்த
இமையா முக்கண் திகழ் இறையவனாய்
புன்னகை பொங்கும் திருமுகம் பொலிய
வன்மையுடனே விளங்கிடும் பொழுதில்
விண்ணக அழகியரில் வியன் புகழுடையாள்
கண்கள் வியக்கும் கவினுடை ரம்பை
பண்ணுடை இசைக்குப் பரதம் பயின்றாள்

பிருங்கி என்னும் பெருந்தவ முனிவனும்
கருத்தை மயக்கும் இந்நாட்டியம் கண்டு
விருப்பம் மிகுந்த விகடநடனத்தால்
கருணைக் கௌரிகாந்தனைப் போற்ற
அண்ணலும் பிருங்கியை அனுக்கிரகிக்க
பண்ணும் சிவநெறிப் பிருங்கிப் பித்தர்
மண் சுமந்திட்ட கடவுளை மட்டும்
சுற்றி வந்தே சம்போ மகாதேவவென்று
பற்றுதலுடனே பன் முறை போற்றி
வற்றாக்கருணை உமையை வணங்கா
உற்ற திடமுடன் நிலவுலகு மீள
முற்றும் துறந்த பிருங்கியாம் முனிவன்
சற்றும் தன்னை மதியாமை கண்டு
சக்தி தரும் சங்கரி மிகக்கோபித்து
தக்க தண்டனை தருவோம் யாமென
துக்கமுண்டாக அவன் சரீரத்திலங்கு
சக்தியெல்லாம் நீங்கவே சபித்தாள்

நண்டொடு பன்றிக்கும் நல்லருள் சுரக்கும்
அண்ணலோ பிருங்கியின் அவலம் கண்டு
தண்டமொன்றை அவன் தாங்க அளித்து
பெண்ணுடை செயற்கு எதிர் செயலாக
திண்மை கொடுத்திட தீரனாம் முனிவனும்
அட்டகாசனாய் விகடமாய் ஆடி
நட்டம் பயில் நாதனைப் போற்றிட
எட்டுத்திசையும் ஏத்தும் அம்மை
வெட்கம் மிகுந்து வேதனை கொண்டு
கைலையை விட்டு காசினிபுகுந்து
கானகம் தோறும் சுழன்று திரிந்து
அலையும் மனதை அடக்கியகௌதமன்
நிலையிலா இன்பம் நாடா முனிவனகத்து
கலை நிறை பூங்காவின் மரமொன்றிலே
இலை மறை காயாய் இனிதுறைந்திட்டாள்

மாரி குன்றி மலரெல்லாம் வாடி
சீரியல் சிதறி செந்நெறி மறைந்து
பாரிலே பாலைவனம் எனக்கிடந்த
பேரியல் அவ்வனம் பெரிதும் மலர்ந்து
கூர்விழி கொண்ட கௌரி மீனாளுற்ற
பேருவகையாலே பொலிவுறச் சிறந்து
அந்தணர் மகிழ ஆவினம் சிறக்க
சுந்தர மலர்கள் சுகந்தம் பரப்ப
சந்ததம் குளிர்ந்த சந்தோஷம் தெரிந்து
தந்தை போலும் கௌதம மறையோன்
முந்தைப் பிணக்கால் மாதிரிபுரசுந்தரி
வந்த தன்மை உணர்ந்தே வணங்கிப்
பந்தமுறவே பாங்குறப் போற்றினன்

அர்த்த நாரியாய் அரனார் உடலில்
பர்த்தா பத்தினி பேதம் ஒளிய
இருவர் என்னும் இயல்பு இல்லாமல்
ஒருவர் என்னும் உயர்வே ஓங்க
கிருபை பொலியும் காட்சியே தோன்றும்
அருளைப் பெறும் வகை அருள்கநீரே
என்று அம்மை வேண்ட அம்மாமுனிவனும்
தன் புண்ணியப்பயன் போலுமிதுவென
கன்னல் மொழியன் கௌதமன் மகிழ்ந்து
பன்முறை போற்றி கேதாரகௌரியென்ற
வன்மை நிறை விரத முறைமையை
அம்மைக்குச் சொல்ல அவளும் மகிழ்ந்து
எம்பிரானை நோக்கி நோன்பு முயன்றாள்

புரட்டாதித் திங்கள் புகழ் அமாவாசை
இரவு கழிந்த ஈரைந்தாம் நாளாம்
வரம் மிகத்தரு விஜயதசமி தொட்டு
இருபத்தொரு நாள் இறைவனை நோக்கி
கருணை மிக்க காமவல்லி நோற்று
வரும் சதுர்த்தசியில் வாழ்வு சிறக்க
இருபத்தொரு முடிச்சுஇட்ட காப்பிழை
கரத்தில் அணிந்தாள் காரிகையாளே

மான்மழு ஏந்திய மாநாற் கரத்தராய்
வான் மண் ஏத்திட வெள்விடையேறி
தேன்நிறை கூந்தல் தேவி முன்பு
கோன் என மணவாளக்கடவுள் தோன்றி
நோன்பினை ஏற்றோம் நொந்தனையோ
என்றே வினவி எம்மன்னை கௌரியை
தன்னோடு அணைத்தே தந்தோம்
இடம் என்று இனிய மொழிபேசி
நடமிடு நாயகர் உருவம் மாறினன்

அப்பனும் அம்மையும் ஆங்கே இணைந்து
இப்புவி ஏத்த அர்த்தநாரீசனாய் இலங்கு
செப்பருவடிவம் கொண்டனர்; அதனை
தப்பிலாப் பிருங்கியொடு கௌதமர்
விண்ணகத்தர் மண்ணவர் யாவரும்
கண்களி கூரமகிழ்ந்தே போற்றினர்

எம்மை நோக்கி இவ்விரதத்தை முறையாய்
இம்மையில் நோற்பவர் இன்பமெல்லாம் பெறுவர்
நம்புமின் இதைஎன்றே நாயகஅர்த்தநாரீசர்
மொழிந்தே அருளினர் போற்றினர் யாவரும்

அன்று தொட்டே ஆடவர் மங்கையர்
என்னும் யாவரும் ஏற்றம் பொங்க
மண்ணுலகத்தில் மணவாழ்வு உண்டாக
பண்ணும் செயல்கள் பலிதமுண்டாக
செல்வம் ஓங்க சீர்மைகள் பொலிய
பல்வகை இன்பமுடன் பரகதிகிட்ட
கேதாரகௌரியுடன் கடவுளைப் போற்றி
தீதில் நோன்பு நோற்றுச் சிறந்தார்

இவ்வாண்டுக்கான கேதாரகௌரி விரதம் நாளைநிறைவாகும்

Tamilische schule dance

Happy Diwali/ இனிய தீபாவளி வாழ்த்துகள்

Happy Diwali/ இனிய தீபாவளி வாழ்த்துகள்

செவ்வி .சிவஸ்ரீ.ஆறுமுக பாஸ்கரக்குருக்கள் Dr. sivasri arumuga Baskarakur...

செவ்வி .சிவஸ்ரீ.ஆறுமுக பாஸ்கரக்குருக்கள் Dr. sivasri arumuga Baskarakur...

இனிய தீபாவளி வாழ்த்துகள் Happy Diwali லண்டன். சிவஸ்ரீ . வசந்தன் குருக்கள்

Happy Diwali/ இனிய தீபாவளி வாழ்த்துகள்

Happy Diwali/ இனிய தீபாவளி வாழ்த்துகள்

https://youtu.be/SU8lt5zz-3Q

Donnerstag, 1. November 2018

உலகில் தலைசிறந்த கல்வியில் பின்லாந்து முதல் இடத்தில்

பாவல் சங்கர்
உலகில் தலைசிறந்த கல்வியில் பின்லாந்து முதல் இடத்தில் உள்ளது அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்வி முறையில் ?
👌பின்லாந்தில் ஏழு வயதில்தான் ஒரு குழந்lதை பள்ளிக்குச் செல்லத்
தொடங்குகிறது...

😰ஒன்றரை வயதில் ப்ளே ஸ்கூல்.., இரண்டரை வயதில் ப்ரீ-கே.ஜி.., மூன்று வயதில் எல்.கே.ஜி., நான்கு வயதில் யு.கே.ஜி என்ற சித்ரவதை அங்கே இல்லை...
😢கருவறையில் இருந்து வெளியில் வந்ததுமே குடுகுடுவென ஓடிச்சென்று பள்ளியில் உட்கார்ந்து கொள்ளும் எந்த அவசரமும் அவர்களுக்கு இல்லை...
👍எல்லா நேரமும் கற்றலுக்கான துடிப்புடன் இயங்கும் குழந்தையின் சின்னஞ்சிறு மூளை, தனது சுற்றத்தின் ஒவ்வோர் அசைவில் இருந்தும் ஒவ்வோர் ஒலியில் இருந்தும் கற்கிறது. இலை உதிர்வதும், செடி துளிர்ப்பதும், இசை ஒலிப்பதும், பறவை பறப்பதும் குழந்தைக்குக் கல்விதான்...
👊இவற்றில் இருந்து வேரோடு பிடுங்கி வகுப்பறைக்குள் நடுவதால், அறிவு அதிவேக வளர்ச்சி அடையும் என எண்ணுவது மூடநம்பிக்கை...
👏ஏழு வயதில் பள்ளிக்குச் செல்லும் பின்லாந்து குழந்தை, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு கிட்டத்தட்ட ஆண்டின் பாதி நாட்கள்தான் பள்ளிக்கூடம் செல்கிறது. மீதி நாட்கள் விடுமுறை...
👌ஒவ்வொரு நாளும் பள்ளி இயங்கும் நேரமும் குறைவு தான். அந்த நேரத்திலும்கூட, படிப்புக்குக் கொடுக்கப்படும் அதே முக்கியத்துவம் இசை, ஓவியம், விளையாட்டு, மற்றும் பிற கலைகளுக்கும் முக்கியத்துவம் உண்டு...
👍 ஒவ்வொரு பள்ளியிலும் ஓர் ஓய்வறை இருக்கும். படிக்கப் பிடிக்கவில்லை அல்லது சோர்வாக இருக்கிறது என்றால், மாணவர்கள் அங்கு சென்று ஓய்வு எடுக்கலாம்...
👌முக்கியமாக, 13 வயது வரை ரேங்கிங் என்ற தரம் பிரிக்கும் கலாசாரம் கிடையாது...
பிராக்ரசு ரிப்போர்ட் தந்து பெற்றோரிடம் கையெழுத்து வாங்கி வரச் சொல்லும் வன்முறை கிடையாது...
👊தங்கள் பிள்ளையின் கற்றல் திறன் குறித்து தெரிந்துகொள்ள வேண்டும் என பெற்றோர்கள் விரும்பினால், தனிப்பட்ட முறையில் விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ளலாம்...
👌கற்றலில் போட்டி கிடையாது என்பதால், தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுக்கும் மன உளைச்சல்கள் மாணவர்களுக்கு இல்லை...
💪சக மாணவர்களைப் போட்டியாளர்களாகக் கருதும் மனப்பாங்கும் இல்லை...
👏இவர்களுக்கு வீட்டுப்பாடம் தரப்படுவது இல்லை...
👌மாணவர்களுக்கு எந்தப் பாடம் பிடிக்கிறதோ அதில் இருந்து அவர்களே வீட்டுப்பாடம் செய்து வரலாம்...
👍ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு மருத்துவர் இருப்பார். அவர், மாணவர்களின் உடல்நிலையை தனிப்பட்ட முறையில் கவனித்து ஆலோசனைகள் வழங்குவார்...
👌ஒரு பள்ளியில் அதிகபட்சமாக 600 மாணவர்கள் இருக்கலாம்; அதற்கு அதிக எண்ணிக்கை கூடவே கூடாது...
👍முக்கியமாக பின்லாந்தில் தனியார் பள்ளிக்கூடமே கிடையாது. அங்கு கல்வி என்பது முழுக்க முழுக்க அரசின் வசம்...
👏கோடீசுவரராக இருந்தாலும், நடுத்தர வர்க்கத்தினராக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும்… அனைவரின் குழந்தைகளும் ஒரே பள்ளியில்தான் படிக்க வேண்டும்...
‘என் பொண்ணு இன்டர்நேசுனல் சுகூல்ல படிக்கிறா’ என சீன் போட முடியாது...
👍அனைவருக்கும் சம தரமுள்ள கல்வி என்ற உத்தரவாதம் உள்ளது...
👌அதனால்தான் பின்லாந்தில் 99 சதவிகிதம் குழந்தைகள் ஆரம்பக் கல்வியைப் பெற்றுவிடுகின்றனர்...
👊அதில் 94 சதவிகிதம் பேர் உயர்கல்விக்குச் செல்கின்றனர்... ‘டியூஷன்’என்ற அருவருப்பான கலாசாரம், அந்த நாட்டுக்கு அறிமுகமே இல்லை...
👍தேர்வுகளை அடிப்படை முறைகளாக இல்லாத இந்தக் கல்வி முறையில் பயின்றுவரும் மாணவர்கள்தான், உலகளாவிய அளவில் நடைபெறும் பல்வேறு தேர்வுகளில் முதல் இடங்களைப் பிடிக்கின்றனர்...
😳"இது எப்படி?" என்பது கல்வியாளர்களுக்கே புரியாத புதிர்...
அந்தப் புதிருக்கான விடையை, ஐ.நா சபையின் ஆய்வு முடிவு அவிழ்த்தது...
😀உலகிலேயே மகிழ்ச்சியாக இருக்கும் குழந்தைகள் பற்றிய தரவரிசை ஆய்வு ஒன்றை, ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வோர் ஆண்டும் வெளியிடுகிறது. இதில் பின்லாந்து எப்போதும் முன்னணியில் இருக்கிறது...
👌மகிழ்ச்சியின் நறுமணத்தில் திளைக்கும் குழந்தைகள், அறிவை ஆர்வத்துடன் சுவைப்பதில் புதிர் எதுவும் இல்லை...
👍பின்லாந்து கல்வி முறையின் இத்தகைய சிறப்புகள் குறித்து அறிந்து வருவதற்காக, உலகமெங்கும் உள்ள கல்வியாளர்களும், பிரதிநிதிகளும் அந்த நாட்டை நோக்கிக் குவிகின்றனர்...
👍உலகின் 56 நாடுகளில் இருந்து 15,000 பிரதிநிதிகள் ஒவ்வோர் ஆண்டும் செல்கின்றனர்...
👍நாட்டின் அந்நியச் செலாவணியில் கணிசமான சதவிகிதம் கல்விச் சுற்றுலாவின் மூலமே வருகிறது...
👊ஆனால், இப்படி தங்களை நோக்கி வீசப்படும் புகழ்மாலைகளை பின்லாந்தின் கல்வியாளர்களும் அமைச்சர்களும் ஓடோடி வந்து ஏந்திக்கொள்வது இல்லை...
அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், "‘பின்லாந்து கல்வி முறைதான் (Finnish Education system) உலகிலேயே சிறந்தது எனச் சொல்ல முடியாது... ஏனெனில் "OCED" அமைப்பின் ஆய்வில் எல்லா உலக நாடுகளும் பங்கேற்காத நிலையில் இப்படி ஒரு முடிவை ஏற்றுக் கொள்ள முடியாது...
எங்களைவிட சிறந்த கல்விமுறையும் இருக்க வாய்ப்பு உள்ளது"’ என்கிறார்கள்...
👏இல்லாத நாற்காலியைத் தேடி எடுத்து ஏறி அமர்ந்து, தனக்குத்தானே முடிசூட்டிக்கொள்ளும் தற்பெருமையாளர்கள் நிறைந்த உலகத்தில் இது பண்புமிக்க பார்வை...
👏மதிக்கத்தக்க மனநிலை.
👍பின்லாந்தில் ஆசிரியர் பணி என்பது, நம் ஊர் ஐ.ஏ.எஸ் ., ஐ.பி.எஸ் போல மிகுந்த சமூகக் கௌரவம் உடையது...
👌அரசின் கொள்கை வகுக்கும் முடிவுகளில், திட்டங்களின் செயலாக்கத்தில் ஆசிரியர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு...
👍மூன்றில் ஒரு பின்லாந்து குழந்தைக்கு, ஆசிரியர் ஆவதுதான் தன் வாழ் நாள் லட்சியம்...
அதே நேரம் அங்கு ஆசிரியர் ஆவது அத்தனை சுலபம் அல்ல!..
👌மேல்நிலை வகுப்பில் சிறந்து விளங்கும் மாணவர்களில் இருந்து ஆசிரியர் பயிற்சிக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்...
👌ஐந்து ஆண்டுகள் உண்டு, உறைவிடப் பள்ளிகளில் சேர்ந்து கடும் பயிற்சி எடுக்க வேண்டும்...
👌பிறகு, ஆறு மாத காலம் ராணுவப் பயிற்சி...
👌ஒரு வருடத்துக்கு வெவ்வேறு பள்ளிகளில் நேரடியாக வகுப்பறையில் ஆசிரியர் பயிற்சி...
👌ஏதாவது ஒரு பாடத்தில் புராசெக்ட்...
குழந்தை உரிமைப் பயிலரங்கங்களில் பங்கேற்பது...
நாட்டின் சட்டத் திட்டங்கள் குறித்த தெளிவுக்காக தேசிய அமைப்புகளிடம் இருந்து சான்றிதழ்...
தீயணைப்பு, தற்காப்புப் பயிற்சி, முதலுதவி செய்வதற்கான மருத்துவச் சான்று… என ஆசிரியர் பயிற்சிக்கு சுமார் ஏழு வருடங்களைச் செலவிட வேண்டும்...
👍இப்படி ஆசிரியர்களை உருவாக்கும் விதத்தில் பின்லாந்து மேற்கொள்ளும் சமரசம் இல்லாத முயற்சிகள்தான், அங்கு கல்வியில் மாபெரும் மறுமலர்ச்சியை உருவாக்கி இருக்கிறது!...
👏👏👏👏👏👏👏👏
இப்போது நாம் அனைவரும் சிந்திக்க வேண்டிய தருணம் இது...
பெற்றோர்கள், கல்வியாளர்கள், கல்வி நிறுவனங்கள், ஆட்சியாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய நேரம் இது...
குழந்தைகள் வளர்ப்பில் நாம் தான் கற்றுக் கொள்ள வேண்டியது அதிகம் இருக்கிறது...
முதலில், பிள்ளைகளுக்கு நல்ல சிந்தனைகளை ஏற்படுத்துங்கள்!...
ஒரு குழந்தையைவிட நாம் உயர்ந்தவர் என்று நினைக்காதீர்கள்….
01. பிள்ளைகள் எதாவது செய்தால் எப்போதும் குறை கூறுதல், அவர்கள் பாராட்டும்படி செய்தாலும் கண்டு கொள்ளாதிருத்தல் போன்ற செயல்களை பலர் செய்கிறார்கள் இதனால் பிள்ளைகளின் மன வளர்ச்சி குன்றும்.
02. எந்தக் குழந்தையும் பின்னால் எப்படி ஆகுமென எவருமே கூற முடியாது. மூடன், அறிவாளியாகலாம்... பைத்தியம், தெளிந்த சித்தமுடையவனாகலாம்... ஆகவே பிள்ளைகளை ஒருகாலமும் தப்பாக மட்டும்கட்டி அலட்சியம் செய்யக் கூடாது.
03. தாமஸ் ஆல்வா எடிசனை மரமண்டை என்று பாடசாலையில் இருந்து வெளியேற்றப்பட்டவர் பின்னாளில் ஆயிரம் கண்டு பிடிப்புக்களுக்கு அவரே அதிபதி.
04. லூயி பாஸ்டியர் சராசரி மாணவனாக பாடசாலையில் இருந்தவர் பின்னாளில் நோபல் பரிசு வாங்கினார்.
05. ஆல்பிரட் ஐன்ஸ்டைனை, அவர் ஆசிரியர், "இவனை போன்ற மூளை அழுகிய மாணவனை நான் பார்த்ததே இல்லை" என்றார் அவர் ஆசிரியர் ஆனால் அவரே 20 ம் நூற்றாண்டின் அதி சிறந்த விஞ்ஞானியானார்.
06. குழந்தைகளுடன் ஒரு நாளில் சிறிது நேரமாவது பேசுங்கள், நல்லதைப் பேசுங்கள் கனிவுடன் பேசுங்கள். அவர்கள் குறைகளைப் பற்றி அதிக நேரம் பேசாதீர்கள் நிறைகளை பற்றிப் பேசுங்கள்.
07. பிள்ளைகளுடன் யாரையும் ஒப்பிட்டு பேசாதீர்கள், அவன் அவனே.. நீங்கள் நீங்களே.. நீங்களே முன்னுதாரணமாக இருங்கள். உங்களைப் பார்த்து அவர்கள் கற்றுக்கொள்வார்கள்.
08. வாழ்வில் வெற்றிபெற்றவரைப்பற்றி பேசுங்கள், ஒவ்வொரு துறையிலும் சிறந்தவர்களைப்பற்றி பேசுங்கள்.
09. எப்படி இருக்கக் கூடாது என்று ஒப்பிட்டு பேசுவதைவிட எப்படி இருக்க வேண்டுமென ஒரு முன்னுதாரண மனிதரைப்பற்றிப் பேசுங்கள்.
10. பிள்ளைகளுக்கு வீட்டுக்குள் விலங்கிடாதீர்கள் வீடு ஒரு சிறைச்சாலைக் கூடமல்ல மனிதர்களை தோற்றுவிக்கும் கோயில்.
11. நல்ல மேற்கோள்களை கொடுங்கள், சுதந்திரம் கொடுத்து, கட்டாயப்படுத்தி வழிக்குக் கொண்டு வாருங்கள்.
12. மலர் தூவியுள்ள பாதையைப்பற்றி பிள்ளைகளுக்கு சொன்னால் அவர்கள் முள் நிறைந்த பாதையை புரிந்து கொள்வார்கள்.
13. உழைப்பைப்பற்றி சொல்லிக் கொடுங்கள் அவர்கள் உழைப்பில்லாத கேடுகளை புரிந்துகொள்வார்கள்.
14. வெற்றி பெற்றவர்களை சொல்லும்போது தோல்வியின் காரணங்களை அவன் அறிந்து கொள்வான்.
15. சுறு சுறுப்பை சொல்லிக் கொடுத்தால் அவன் சோம்பலை அடையாளம் காண்பான், விதியை வென்றவர்களை சொல்லும்போது அவன் வேதனையில் நொந்து அழிந்தவர்களை கண்டு கொள்வான் – இது போதும்...
முதலில் நாம் மாற வேண்டும்.
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு...
மாற்றம் ஒன்றே மாறாதது...
நல்ல மாற்றம் தான் வளர்ச்சியை தரும்.
பின்லாந்தின் கல்விமுறையிலிருந்து நாம் கற்றுக் கொண்டு மாறுவோம்!.
குழந்தைகளின் எதிர்காலத்தைப் சிறப்பாக மாற்றுவோம்!.
- படித்ததில் பிடித்தது.

''முத்தமிழ் சங்க உபாசகி'' பாடகி - ஷிராணி உதயகுமார் நேர்காணல்செல்வி -ஹஸ...

செவ்வி .சிவஸ்ரீ.ஆறுமுக பாஸ்கரக்குருக்கள் Dr. sivasri arumuga Baskarakur...

ஆசியன்

https://www.youtube.com/watch?v=_1pX4LewEQU

🎉 Sri Kamakshi Ampal Temple Theerfestival Hamm, Germany 2025#தேர்த்திர...

ஐரோப்பாவில்