Meine Blog-Liste
Mittwoch, 20. Oktober 2021
Montag, 18. Oktober 2021
கௌரிக் காப்புத் தோத்திரம்
தேவி துணை
ஓம் சக்தி ஓம்
காப்பு
முன்னின்று செய்யுள் முறையாய்ப் புனைவதற்கு
என்னின் றருள்செய் எலிவா கனப்பிள்ளாய்
சொற்குற்ற மொடு பொருட்குற்றம் சோர்வு தரும்
எக்குற்றமும் வாராமற்கா.
வேண்டுதற் கூறு
காப்பெடுக்க வந்தேனே கௌரியம்மாள் தாயாரே
காத்தென்னைத் தேற்றிடுவாய் காளிமகா தேவியரே
காலமெல்லாம் நின்னரிய காப்பெடுத்தே வாழ்ந்திடுவேன்
எண்ணும் கருமம் இனிதாக முடித்திடுவாய்
பண்ணும் வினையாவும் பனிபோலப் போக்கிடுவாய்
உண்ணும் உணவாக உயிரினுக் குயிராக
என்றும் இருந்தே எனைக்காத்து வந்திடுவாய்
காடும் கடந்துவந்தேன் மலையும் கடந்து வந்தேன்
காளிமகா தேவியரே காப்பெனக்குத் தந்திடுவாய்
சூலம் கொண்டவளே சுந்தர முகத்தவளே
அரியை உடையவளே அம்மா காளிதாயே
கொடியமகிஷாசுரனைக் கூறு போட்டவளே
அசுரக் குணம் யாவும் அழிக்கும் சுடர்க்கொடியே
சிவனை நினைத்தல்லோ சீர்விரதம் நீயிருந்தாய்
பரனை நினைத்தல்லோ பதிவிரதம் நீயிருந்தாய்
அரனை நினைத்தல்லோ அம்மாநீ நோன்பிருந்தாய்
சங்கரனை எண்ணீயல்லோ சங்கரிநீ நோன்பிருந்தாய்
ஐங்கரனைப் பெற்றவளே அன்றுநீ நோன்பிருந்தாய்
விரதத்தைக் கண்டே விழித்தான் சிவனவனும்
அம்மா உமை அணைத்தே அருள்மாரி பொளிந்தானே
வகையாற்றுப் படலமிதை வழிவழியாக் காட்டிடுவீர்
நெறியறியாத் திகைப்போர்க்கு நெறிமுறையைக் காட்டிடுவாய்
காப்பைப் புனைந்துவிடு காலபயம் ஓட்டிவிடு
நூலைப் புனைந்துவிடு நுண்ணறிவை ஊட்டிவிடு
வல்லமையைத் தந்துவிடு வையகத்தில் வாழவிடு
காளிமகா தேவியரே காப்பருளும் தேவியரே
காப்பைப் புனைபவளே காப்பாய் இருப்பவளே
நாடு செழிக்கவென்றே நற்காப்பு அருளுமம்மா
வீடு செழிக்கவென்றே விழைகாப்பு அருளுமம்மா
நல்வாழ்வு வாழ்வதற்கு நறுங்காப்பு அருளுமம்மா
அல்லல் அறுப்பதற்கே அருட்காப்பு அருளுமம்மா
பிள்ளை அற்றவர்க்குப் பெருங்காப்பு அருளுமம்மா
பூமணியே மாமணியே புனிதவதி தாயவளே
நான்விரும்பும் காப்பை நலமுடனே தாருமம்மா
கல்வி சிறப்பதற்குத் கலைமகளே வாருமம்மா
செல்வம் சிறப்பதற்குத் திருமகளே வாருமம்மா
வீரம் சிறப்பதற்கு வீரசக்தி தாருமம்மா
பாட்டுடைத் தலைவியரே பராசக்தி தாயவளே!
ஏட்டுடைத் தலைவியரே எல்லாம்மிகு வல்லபையே
காப்பெடுக்க வந்தேனம்மா கனிவுடனே பாருமம்மா
பால்பழங்கள் வெற்றிலைகள் பல்வகைத் திரவியங்கள்
நானுமக்குத் தாறேனம்மா நயந்தென்னைக் காருமம்மா
காளமகா தேவியரே காசினிக்கு வித்தவளே
வித்தை விதைப்பவளே வினைகாக்கும் காப்பவளே
எத்தால் வாழ்ந்திடுவோம் எல்லாம் உமதருளே
காசினியில் வேற்றுமையை கணபொழுதே மாற்றிவிட்டால்
ஏசலின்றி வாழ்ந்திடுவோம் ஏந்துபுகழ் தேவியளே
காப்பெனக்குப் போட்டுவிட்டால் கல்மனது இளகிவிடும்
ஞானம் பெருகிவரும் நல்வாழ்வு மிகுந்துவரும்
தொடர்ந்து அணிவோர்க்கு தொட்டதெல்லாம் ஜெயமாகும்
இசைந்து அணிவோர்க்கு நினைத்ததெல்லாம் ஈடேறும்
நம்பி அணிவோர்க்கு ந்ல்லதெல்லாம் பெருகிவரும்
நாள்கள் கோள்களெல்லாம் நலமுடனே இணைந்துவரும்
சந்தனச் சாந்தவளே சங்கரியே சாந்தினியே
குங்குமப் பூச்சவளே குலக்கொழுந்தே கௌரியம்மா
காப்புக் கட்டிவிட்டுக் கடமை முடிந்ததென்று
ஏப்பம் மிகவிட்டு என்றுமே இருந்தறியேன்
நாளும் பொழுதிலெல்லாம் நறுங்காப்புக் கட்டதனில்
பூவும் நீருமிட்டுப் போற்றி வணங்கிடுவேன்
காலைப் பொழுதெழுந்து காப்பதனில் விழித்திடுவேன்
ஞானச் செழுஞ்சுடரே காளியுன்னைக் காணுகின்றேன்
காப்பெனக்குக் கையிலுண்டு கடமைகளைச் செய்திடுவேன்
ஏய்ப்பவரைக் கண்டால் எரிமலைபோற் கனன்றிடுவேன்
தீமைச் செயலெதுவும் தெரியாது செய்கையிலே
காப்புக் கையிலிருந்து கண்திறந்து காட்டுமடி
சொல்லற் கரிதான சோதிமிகு காப்பதனை
இருபது நாள்வரையில் இசைவோடு விரதமிரு
பக்தி மனதுடனே பரவி யணிவோர்க்கு
சித்தியெல்லாந்தருவாள் சீர்பெருகு கௌரியவள்
முத்திக்கு வழியுமுண்டு முக்கால உணர்வுமுண்டு
எச்சகத்தி லோர்களெல்லாம் ஏற்றியெமைப் போற்றிடுவர்
சொற்சக்தி பொருட்சக்தி துலங்கி வந்திடவே
அச்சக்தி எல்லாம் அருள்வாள் கௌரியவள்
கௌரிக் காப்பதனைக் காலம் தவறாமல்
முறையாய் அணிந்துவர முன்வினைகள் நீங்கிவர
ஞானம் ஓங்கிவர ந்ல்லறிவு துலங்கிவர
தேவிமகா காளியரே தெவிட்டாத தீங்கனியே
காளியாய் வந்தமர்ந்த கௌரியே காப்பறுளும்
ஓம் சக்தி ஓம்
Sonntag, 17. Oktober 2021
ஜெர்மனியில் வூ ப்பெற்றால் நகரில் எழுந்தருளி அருள்தரும் ஸ்ரீ நவதுர்க்கா தேவி ஆலய விஜயதசமி பெருவிழா
உலகக்கோவில்
15.10.2021 மானம்பூமிகவும் சிறப்பாக நடைபெற்றது .புலம் பெயர்ந்த தேசத்தில் இப்படி ஒரு பெருவிழா அதுவும் வெள்ளி சிங்கவாகனத்தில் சிம்மாசனம் அமர்ந்து அன்னை நவதுர்க்கா தேவி எழுந்தருளிய காட்சி அழகு. இந்த சிங்க வாகனத்தை நெதர்லாந்தில் வசிக்கும் மாவை கமல் அன்பளிப்பு செய்து கொடுத்து இருந்தார். நேரலையாக திரு .சக்திவேல் அவர்கள் வர்ணனை செய்து இரு ந்தார் .மேலும் ஆலய அறங்காவலர்கள் அனைவருக்கும் .மற்றும் இளைஞர்கள் அனைவருக்கும் .சைவத்திரு . அமரன் ஸ்ரீ அவர்களுக்கும் . ஆலய பிரதம குரு சிவஸ்ரீ .சோ ,இராஜா குருக்கள் பிரம்மஸ்ரீ ஆகாஷ் சர்மா அவர்களும் சிறப்பாக நடாத்தி இருந்தனர். அடியவர்களுக்கும் .நமது நாதஸ்வர கலைஞர்கள் பகீரதன் குகேஸ்வரன் இசையுடன் .உலகக்கோவில் இராஜ .இலக்கியன் நேரடியாக ஒளி பரப்பு செய்து இருந்தார் .மேலும் உலக மக்கள் அனைவருக்கும் அன்னையின் அருள் கிடைக்க வேண்டு கின்றேன் தமிழன்புடன் பி.எஸ். இராஜகருணா இராஜ இலக்கியன் 15.10.2021 Sri Navathurgadevi Tempel e.V. Adresse: Hünefeldstraße 63B, 42285 Wuppertal Germany Telefon: 0202 4796017
manampoo#மானம்பூ #விஜயதசமி பெருவிழா
ற்றால் நகரில் எழுந்தருளி அருள்தரும் ஸ்ரீ நவதுர்க்கா தேவி ஆலய விஜயதசமி பெருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது .புலம் பெயர்ந்த தேசத்தில் இப்படி ஒரு பெருவிழா அதுவும் வெள்ளி சிங்கவாகனத்தில் சிம்மாசனம் அமர்ந்து அன்னை நவதுர்க்கா தேவி எழுந்தருளிய காட்சி அழகு. இந்த சிங்க வாகனத்தை நெதர்லாந்தில் வசிக்கும் மாவை கமல் அன்பளிப்பு செய்து கொடுத்து இருந்தார். நேரலையாக திரு .சக்திவேல் அவர்கள் வர்ணனை செய்து இரு ந்தார் .மேலும் ஆலய அறங்காவலர்கள் அனைவருக்கும் .மற்றும் இளைஞர்கள் அனைவருக்கும் .சைவத்திரு . அமரன் ஸ்ரீ அவர்களுக்கும் . ஆலய பிரதம குரு சிவஸ்ரீ .சோ ,இராஜா குருக்கள் பிரம்மஸ்ரீ ஆகாஷ் சர்மா அவர்களும் சிறப்பாக நடாத்தி இருந்தனர். அடியவர்களுக்கும் .நமது நாதஸ்வர கலைஞர்கள் பகீரதன் குகேஸ்வரன் இசையுடன் .உலகக்கோவில் இராஜ .இலக்கியன் நேரடியாக ஒளி பரப்பு செய்து இருந்தார் .மேலும் உலக மக்கள் அனைவருக்கும் அன்னையின் அருள் கிடைக்க வேண்டு கின்றேன் தமிழன்புடன் பி.எஸ். இராஜகருணா இராஜ இலக்கியன் 15.10.2021 Sri Navathurgadevi Tempel e.V. Adresse: Hünefeldstraße 63B, 42285 Wuppertal Germany Telefon: 0202 4796017
Abonnieren
Posts (Atom)
அமெரிக்காவில் ஆன்மீகம்
Über mich
ஆசியன்
https://www.youtube.com/watch?v=_1pX4LewEQU
https://youtu.be/JPhkcgfCcwY
ஐரோப்பாவில்
-
Germany 04.10.2018 குருப்பெயர்ச்சி இன்று ஸ்ரீ கனகதுர்க்கா அம்மாள் ஆலயத்தில் சிறப்பாக நடை பெற்ற க...
-
உலகக்கோவில் 30..01.2020 உலகிற்கு சிறந்த ஆன்மீக கருத்துக்களை வழங்கிவரும் ''சர்வதேச இந்து மதகுரு பீடாதிபதி'' அகில இலங்கை சப...